தென்னிந்திய சினிமாவின் முன்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடுவதோடு பல திரைப்படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டார். மேலும், அவரது உடல் நிலை குறித்து சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரே வீடியோ லைவில் வந்து ரசிகர்களிடம் பேசியதால் நிம்மதியடைந்தனர்.
இந்த நிலையில், எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை, அவரது உடல் நிலை குறித்து இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதாவது, எஸ்.பி.பி-யின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...