'வனமகன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சாயீஷா, தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த நிலையில், நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தற்போது சாயீஷாவும், ஆர்யாவும் ஜோடியாக டெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சாயீஷாவின் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த மரணத்தால் அவரும், ஆர்யாவும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அதாவது, சாயீஷாவின் தாத்தாவான பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் சகோதரர்கள் இஹ்சான் கான் மற்றும் அஸ்லாம் கான் ஆகியோர் கடந்த 16 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவருக்கு 90 வயது, மற்றொருவருக்கு 88 வயது என்பதால், அவர்களது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது.
இதற்கிடையே, அஸ்லாம் கான் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில், திலீப் குமாரின் மற்றொரு சகோதரரான இஹ்சான் கானும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது இரண்டு தாத்தாக்கல் அடுத்தடுத்து உயிரிழந்ததால் சாயீஷாவும், அவரது கணவர் ஆர்யாவும் பெரும் சோகத்தில் உள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...