சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த படம் ‘நிமிர்ந்து நில்’. ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் கதாநாயகியாக அமலா பால் நடித்திருந்தார். இரண்டாவது கதாநாயகியாக கன்னட நடிகை ராகினி திவேதி நடித்திருந்தார். இவர் காவேரி பிரச்சினையின் போது தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது, என்று கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகை ராகினி திவேதி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் வழக்கில் பல நடிகர், நடிகைகள் பெயர் அடிபட்டு வருகிறது.
இதற்கிடையே, கன்னட சினிமா இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர், போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் பெயர் பட்டியலை போலீசிடம் வழங்கினார். அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய கர்நாடக காவல்துறை, நடிகை ராகினி திவேதியை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், அவர் விசாரணைக்கு செல்லவில்லை.
பிறகு, நடிகை ராகினி திவேதி சார்பில் அவரது வழக்கறிஞர் போலீசாரை சந்தித்து அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் ராகினி திவேதி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ராகினி திவேதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்டிருக்கும் நடிகை ராகினி திவேதியிடம் போலீசார் நடத்தும் விசாரணைக்குப் பிறகு மேலும் சில கன்னட நடிகர், நடிகைகள் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...