Latest News :

போதைப்பொருள் வழக்கில் கைதான ஜெயம் ரவி பட நடிகை!
Friday September-04 2020

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த படம் ‘நிமிர்ந்து நில்’. ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் கதாநாயகியாக அமலா பால் நடித்திருந்தார். இரண்டாவது கதாநாயகியாக கன்னட நடிகை ராகினி திவேதி நடித்திருந்தார். இவர் காவேரி பிரச்சினையின் போது தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது, என்று கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

 

இந்த நிலையில், நடிகை ராகினி திவேதி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் வழக்கில் பல நடிகர், நடிகைகள் பெயர் அடிபட்டு வருகிறது.

 

இதற்கிடையே, கன்னட சினிமா இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர், போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் பெயர் பட்டியலை போலீசிடம் வழங்கினார். அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய கர்நாடக காவல்துறை, நடிகை ராகினி திவேதியை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், அவர் விசாரணைக்கு செல்லவில்லை.

 

பிறகு, நடிகை ராகினி திவேதி சார்பில் அவரது வழக்கறிஞர் போலீசாரை சந்தித்து அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் ராகினி திவேதி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ராகினி திவேதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

Actress Ragini Dwivedi

 

கைது செய்யப்பட்டிருக்கும் நடிகை ராகினி திவேதியிடம் போலீசார் நடத்தும் விசாரணைக்குப் பிறகு மேலும் சில கன்னட நடிகர், நடிகைகள் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

6926

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படம் துவங்கியது!
Wednesday November-19 2025

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

Recent Gallery