விஜய் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வேட்டைக்காரன்’. இப்படத்தை பாபு சிவன் என்பவர் இயக்கினார். இவர் தான் விஜயின் ‘குருவி’ படத்திற்கும் வசனம் எழுதினார்.
திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநர் பாபு சிவன், தற்போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்திருக்கிறார். அவரது மரண செய்தியால் தமிழ் திரையுலகமே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.

கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட இயக்குநர் பாபு சிவன், கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்திருக்கிறார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அவர் இன்று உயிரிழந்தார்.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...