பெண் பின்னணி பாடகரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல போஜ்புரி மொழி திரைப்பட நடிகர் மனோஜ் பாண்டே கைது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பெண் பாடகரை முதன் முதலில் சந்தித்த நடிகர் மனோஜ் பாண்டே, அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவரது பேச்சைக் கேட்டு அந்த பின்னணி பாடகியும் நடிகர் மனோஜுடன் நெருக்கமாக பழக, இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்துள்ளனர்.
அப்படி இருவரும் வாழும் காலத்தில் பாடகி கர்ப்பமடைய, அதை ஏற்காத நடிகர் மனோஜ், கருவை கலைக்குமாறு வலியுறுத்த, அந்த பெண்ணும் கருவை கலைத்துள்ளார்.
இந்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருந்த மனோஜ், தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண், நடிகர் மனோஜுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாடகியின் புகாரின் பேரில் நடிகர் மனோஜ் பாண்டே மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நேற்று படப்பிடிப்பு தளத்தில் வைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் போஜ்புரி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...