Latest News :

பெண் பாடகி கற்பழிப்பு - பிரபல நடிகர் கைது!
Saturday September-23 2017

பெண் பின்னணி பாடகரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல போஜ்புரி மொழி திரைப்பட நடிகர் மனோஜ் பாண்டே கைது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பெண் பாடகரை முதன் முதலில் சந்தித்த நடிகர் மனோஜ் பாண்டே, அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவரது பேச்சைக் கேட்டு அந்த பின்னணி பாடகியும் நடிகர் மனோஜுடன் நெருக்கமாக பழக, இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்துள்ளனர்.

 

அப்படி இருவரும் வாழும் காலத்தில் பாடகி கர்ப்பமடைய, அதை ஏற்காத நடிகர் மனோஜ், கருவை கலைக்குமாறு வலியுறுத்த, அந்த பெண்ணும் கருவை கலைத்துள்ளார்.

 

இந்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருந்த மனோஜ், தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண், நடிகர் மனோஜுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

பாடகியின் புகாரின் பேரில் நடிகர் மனோஜ் பாண்டே மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நேற்று படப்பிடிப்பு தளத்தில் வைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் போஜ்புரி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

695

காதலர்களின் பெற்றோர்களை பற்றி எழுத தவறி விடுவோம் - இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் ஆதங்கம்
Friday October-31 2025

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...

”ஆதித்யா புதுமுகம் போல இல்லை” - நாயகனை பாராட்டிய கெளரி கிஷன்
Friday October-31 2025

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...

”சினிமாவில் அதிகரிக்கும் பிளாக் மெயில்” - ’வள்ளுவன்’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி வருத்தம்
Thursday October-30 2025

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...

Recent Gallery