பாக்யராஜ் இயக்கி நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். அப்படி அவரது வெற்றிப் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்று தான் ‘முந்தானை முடிச்சு’. நகர்புறம், கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையையும் நிகழ்த்தியது.
இப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் புதிய பொலிவுடன் ‘முந்தானை முடிச்சு’ உருவாக உள்ளது. பாக்யராஜின் கதை, திரைக்கதை, வசனத்தில் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப சில மாற்றங்களுடன் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
ஜே.எஸ்.பி பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...