‘சைக்கோ’ படத்திற்குப் பிறகு விஷாலை வைத்து ’துப்பறிவாளன் 2’ இயக்கி வந்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்படத்தில் இருந்து விலகியர், சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும், அருண் விஜயை வைத்து ‘அஞ்சாதே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாகவும் கூறினார். ஆனால், அப்படங்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் தனது புதிய படத்தின் அறிவிப்பை நள்ளிரவு வெளியிட்டார். ‘பிசாசு’ இரண்டாம் பாகமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ‘பிசாசு 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் டி.முருகானந்தம் இப்படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...