‘மெர்சல்’ தலைப்பு தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் தடை வாங்கியதால், அப்படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் ரொம்பவே மெர்சலாகியுள்ளது.
ரூ.132 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ‘மெர்சல்’ படத்தை வைத்து தியேட்டர் வசூல் மட்டும் இன்றி, மெர்சல் என்ற பெயரை வைத்து டீ-சர்ட் உள்ளிட்ட சில வணிக பொருட்களையும் தயாரித்து விற்பனையில் விடும் நோக்கத்தில், அந்த வார்த்தைக்கு டிரேட் மார்க் வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்திற்கு, நீதிமன்றத்தின் இடைக்கால தடை இடியாக விழுந்துள்ளது.
இதற்கிடையே, நீதிமன்றத்தின் தடையால் ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகு என்று நேற்று தகவல்கள் பரவ, இது தொடர்பாக நிருபர்கள், மெர்சல் படக்குழுவினரிடம் விசாரிக்கையில், படம் நிச்சயம் தீபாவளிக்கு வெளியாகும், கடவுள் இருக்கிறார், என்ற பதில் மட்டுமே வந்தது.
இந்த நிலையில், மெர்சல் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை, வெளிநாட்டிக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ள விஜய்க்கு காதுக்கு போக, மனுஷன் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டாராம்.
தனது ஒவ்வொரு படத்தின் போதும், இப்படி யாராவது, எதாவது பிரச்சினையை கிளப்பி விட்டுக்கொண்டிருப்பது வழக்கமாகிவிட்டதை, எண்ணீ ரொம்பவே கவளையடைந்த விஜய், விரைவில் சென்னை திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...