தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிய நிலையில் தற்போது தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. அதன் காரணமாக சில துறைகள் செயல்பட அரசு அனுமதி அளித்து வருகிறது. அதன்படி, சீரியல் படப்பிடிப்புகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்த தமிழக அரசு தற்போது திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களிடம் பிரபலமாக உள்ள தொடர்களில் ஒன்று ‘அரண்மனைக்கிளி’. இத்தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை மோனிஷா. தற்போது ‘அரண்மனைகிளி’ தொடர் ஒளிபரப்பாகாத நிலையில், மலையாள தொடர் ஒன்றில் மோனிஷா நடித்து வருகிறார். மலையாள தொடர் படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துக் கொண்ட மோனிஷாவுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போக, பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், அந்த படப்பிடிப்பில் இருந்த 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அப்படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீரியல் படப்பிடிப்பால் இப்படி பலருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதால், திரைபிரபலங்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...