Latest News :

ஆஸ்திரேலிய காதலரை கட் செய்த பிரியா பவானி சங்கர்! - கோலிவுட் காதலரை கரம் பிடிக்கிறார்
Wednesday September-30 2020

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். ‘மேயாத மான்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். ’பொம்மை’, ‘இந்தியன் 2’, ‘வான்’, ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட அரை டஜனுக்கு மேலான படங்களை கையில் வைத்துள்ளார்.

 

இந்த நிலையில், பிரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ ஒருவரை காதலிப்பதாகவும், அவரை தான் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியகியுள்ளது. இந்த தகவலை வேறு யாரும் வெளியிடவில்லை, பிரியா பவானி சங்கரும், அவரது கோலிவுட் காதலரும் தான் வெளியிட்டுள்ளார்கள்.

 

ஆம், தற்போது பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் ‘பெல்லி ஜுப்புடு’ தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

 

இதற்கிடையே, நடிகர் ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கரும் தானும் காதலிப்பதாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட, அதற்கு பிரியா பவானி சங்கர், “லாக் டவுன் முடியும் வரை உன்னால் பொருமையாக இருக்க முடியாதா” என்று கேட்டுள்ளார். ஆக, தாங்கள் காதலிப்பதை இருவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் இந்த பதிவு இருக்கிறது.

 

Priya Bhavani Shankar and Harish Kalyan

 

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். காரணம், பிரியா பவானி சங்கர் ஏற்கனவே குமரவேல் என்பவரை காதலித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் காதலிக்கும் குமரவேல் காதலை அவர் கட் பண்ணிவிட்டு நடிகரை திருமணம் செய்ய இருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

ஆனால், உண்மையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கரின் இந்த காதல் பதிவு வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே. ஆம், தங்களத் படத்தை விளம்பரப் படுத்தவே அவர்கள் இப்படி காதல் கிசுகிழுவை உருவாக்கியுள்ளனர்.

Related News

6968

”மக்களும், சினிமாவும் மாற வேண்டும்” - ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பட விழாவில் திருநாவுக்கரசு பேச்சு
Tuesday April-23 2024

தமிழ் திரையுலகில் புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்புகளுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு...

நினைவுச் சின்னங்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ’கல்கி 2898 AD’ படத்தின் அஸ்வத்தாமா கதாபாத்திரம்!
Monday April-22 2024

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான திரைப்படம் ’கல்கி 2898 AD’...

நான்கு கதைகளைக்கொண்டு உருவாகும் ‘நிறம் மாறும் உலகில்’!
Monday April-22 2024

அறிமுக இயக்குநர் பிரிட்டோ.ஜெபி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘நிறம் மாறும் உலகில்’...