Latest News :

கவலையில் ஜெயம் ரவி குடும்பம்! - காரணம் இது தான்
Wednesday September-30 2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி, இவரது அண்ணன் தான் இயக்குநர் மோகன் ராஜா என்பதும், இவர்களது அப்பா தான், தயாரிப்பாளரும் படத்தொகுப்பாளருமான மோகன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அது மட்டும் அல்ல, ஜெயம் ரவியின் மாமியார் பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் ஆவார். இவர் ஜெயம் ரவியை வைத்து ‘அடங்க மறு’ என்ற படத்தை தயாரித்திருந்த நிலையில், இரண்டாவதாக ‘பூமி’ என்ற படத்தை தயாரித்துள்ளார்.

 

ஜெயம் ரவியின் 25 வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை லஷ்மண் இயக்கியுள்ளார். இதில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டெட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

கொரோனா பாதிப்பால் வெளியாகமல் இருந்த இப்படம் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்திற்கு விற்கப்பட்டு விட்டதாகவும், அதனால், செப்டம்பர் 27 ஆம் தேதி நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியானது.

 

இந்த நிலையில், ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் ‘பூமி’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், ஜெயம் ரவியின் மாமியார் கேட்ட விலை ரொம்ப அதிகம் என்று கருதிய ஹாட்ஸ்டார் நிறுவனம் படத்தை வாங்க மறுத்துவிட்டதாம். நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய ரூ.45 கோடி கொடுக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறினாராம். ஆனால், ரூ.25 கோடி மட்டுமே கொடுக்க முடியும் என்று ஹாட்ஸ்டார் கூறிவிட்டார்களாம். இதனால், பூமி படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை. 

 

Bhoomi

 

மேலும், அமேசான் உள்ளிட்ட மேலும் சில ஒடிடி தளங்களிலும் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்த அவர்களும், சுஜாதா விஜயகுமார் கேட்ட தொகையால், படத்தை வாங்க தயங்குகிறார்களாம்.

 

‘கோமாளி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவியின் நடிப்பில் ‘பூமி’ வெளியாவதால், அப்படம் பெரிய விலை போகும் என்று எதிர்ப்பார்த்த ஜெயம் ரவியின் குடும்பம், படம் தற்போது வரை விலைபோகாததால் கவலையில் இருக்கிறார்களாம்.

Related News

6970

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படம் துவங்கியது!
Wednesday November-19 2025

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

Recent Gallery