Latest News :

’ரோஜா’ சீரியல் நடிகைக்கு போடப்பட்ட திடீர் ஊசி! - படப்பிடிப்பில் பரபரப்பு
Thursday October-01 2020

கொரோனாவால் முடங்கியிருந்த சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதே போல், மலையாள சீரியல் படப்பிடிப்பு ஒன்றில் கொரோனா பரவிதயாக தகவல் வெளியானதால், திரை பிரபலங்கள் அச்சமடைந்தனர்.

 

இந்த நிலையில், ‘ரோஜா’ தொடர் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்கரிக்கு படப்பிடிப்பில் திடீரென்று வந்த மருத்துவக் குழு ஊசி ஒன்றை அவருக்கு போட்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

 

இது குறித்து விசாரிக்கையில், படப்பிடிப்பின் போது நடிகை பிரியங்கா நல்கரிக்கு காலில் சுலுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவரது காலில் வலி அதிகரிக்க செய்திருக்கிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல படக்குழு ஏற்பாடு செய்ய, கொரோனா பீதியால், மருத்துவமனைக்கு செல்ல நடிகை பிரியங்கா மருத்துவிட்டாராராம்.

 

அதே சமயம், அவரது கால் வலி தொடர்ந்து அதிகரித்து வந்ததால், மருத்துவக் குழுவை படப்பிடிப்பு தளத்திற்கே வர வைத்து அவருக்கு ஊசி போட வைத்திருக்கிறார்கள். ஊழி போட்ட பிறகு வலி குறைந்து மீண்டும் அவர் நடிக்க தொடங்கிவிட்டாராம்.

Related News

6971

’குறள்’ ஆக மாறிய நடிகை மமிதா பைஜூ!
Wednesday June-25 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...

இயக்குநர் நெல்சன் நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார் - ‘டி.என்.ஏ’பட விழாவில் நடிகர் அத்ரவா பேச்சு
Wednesday June-25 2025

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...

’சாருகேசி’ படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது - நடிகை சுஹாசினி நெகிழ்ச்சி
Tuesday June-24 2025

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...

Recent Gallery