கொரோனாவால் முடங்கியிருந்த சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதே போல், மலையாள சீரியல் படப்பிடிப்பு ஒன்றில் கொரோனா பரவிதயாக தகவல் வெளியானதால், திரை பிரபலங்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலையில், ‘ரோஜா’ தொடர் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்கரிக்கு படப்பிடிப்பில் திடீரென்று வந்த மருத்துவக் குழு ஊசி ஒன்றை அவருக்கு போட்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இது குறித்து விசாரிக்கையில், படப்பிடிப்பின் போது நடிகை பிரியங்கா நல்கரிக்கு காலில் சுலுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவரது காலில் வலி அதிகரிக்க செய்திருக்கிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல படக்குழு ஏற்பாடு செய்ய, கொரோனா பீதியால், மருத்துவமனைக்கு செல்ல நடிகை பிரியங்கா மருத்துவிட்டாராராம்.
அதே சமயம், அவரது கால் வலி தொடர்ந்து அதிகரித்து வந்ததால், மருத்துவக் குழுவை படப்பிடிப்பு தளத்திற்கே வர வைத்து அவருக்கு ஊசி போட வைத்திருக்கிறார்கள். ஊழி போட்ட பிறகு வலி குறைந்து மீண்டும் அவர் நடிக்க தொடங்கிவிட்டாராம்.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...