கொரோனா பாதிப்பால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டாலும், அவை தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், பொழுதுபோக்குத் துறைகள் மட்டும் இன்னும் புத்துயிர் பெறவில்லை. குறிப்பாக சினிமாத்துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதோடு, எப்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும், என்பது யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.
இதன் காரணமாக, சினிமாவை நம்பியிருந்த தொழிலாளர்கள் மட்டும் இன்றி சில முன்னணி நடிகர், நடிகைகள் கூட வேறு தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில், பிரபல நடிகை ஒருவர் வருமானத்திற்காக புது தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.
மலையாள திரைப்படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து வந்தவர் மஞ்சு பிள்ளை. படப்பிடிப்பு இல்லாதா காரணத்தால் வருமானம் இன்றி தவித்த இவர், தற்போது எருமை மாடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
தனது கணவரான ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவின் ஆலோசனையின்படி முரா என்ற 50 எருமை மாடுகளை வாங்கிய மஞ்சு பிள்ளை, திருவனந்தபுரம் அட்டிங்கல்லில் பண்ணை அமைத்து அவற்றை வளர்த்து வருகிறார். இதனால், மாடு மேய்ப்பது, தொழுவத்தில் கட்டுவது என அவர் மாடுகளுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...