தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, கதாநாயகிகளை மையப்படுத்திய படங்களில் நடிப்பதோடு, முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். மொத்தத்தில், கை நிறைய பட வாய்ப்புகளும், பல கோடி சம்பளமும் என்று அவரது சினிமா வாழ்க்கை திருவண்ணாமலை தீபம் போல பிரகாசமாக உள்ளது.
என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அவ்வபோது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும், அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதையும் நயன்தாரா தவறாமல் செய்கிறார். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு இருந்ததால் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்கும் நயன், சமீபத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளை பயன்படுத்தி, தனது காதலர் விக்கியுடன் குட்டி சுற்றுலா சென்றிருக்கிறார்.
இப்படி வருட கணக்கில் தனது காதலருடன் சுற்றுப் பயணம் செல்லும் நயன்தாராவிடம் அனைவரும் கேட்பது, எப்போது திருமணம்? என்று தான். மற்றவர்களைப் போல் விக்னேஷ் சிவனும் நயன்தாராவின் திருமணத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க, இந்த வருடம் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதே சமயம், நயன்தாராவுக்கு திருமண தோஷம் இருப்பதாக அவரது ஆஸ்த்தான ஜோதிடர் கூறியிருப்பதால், அதற்கான பரிகாரம் செய்துவிட்டு தான் திருமணம் செய்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நயன்தாரா தனது திருமணம் தொடர்பாக புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம். அதாவது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற பிறகே திருமணம் செய்துக் கொள்வாராம். அவரது இந்த முடிவால், அவரது காதலர் விக்னேஷ் சிவன் அதிர்ச்சியடைந்துள்ளாராம்.
‘அறம்’ படத்திற்கே நயன்தாராவுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டியது. ஒரு சில காரணங்களால் நழுவிப்போன அவ்விருதை நிச்சயம் வென்றே தீருவேன், என்று நயன் சபதம் எடுத்தது சரி தான். ஆனால், அதற்காக திருமணத்தை நிறுத்தியது சரியா? என்று விக்னேஷ் சிவன் தன்னை தானே கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...