தமிழ் சினிமாவிம் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அரசியல் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக தன்னை காட்டிகொண்டு வருகிறார். அவரை விட அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் அரசியலில் ஈடுபட வேண்டும், என்பதில் பேரார்வமாக இருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, எஸ்.ஏ.சந்திரசேகர் பா.ஜ.க-வில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை, நேரம் வரும் போது நானும், விஜயும் அரசியலுக்கு வருவோம், அப்படி வரும்போது விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும், என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், விஜய் தனது பனையூர் இல்லத்தில் தனது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை திடீரென்று சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தனது மக்கள் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஜய், மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியைப் போன்று கட்டமைத்திருப்பதாக கூறப்பட்டது. தற்போது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேசியிருப்பதால், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது விஜய், அரசியல் கட்சி தொடங்கி, அரசியலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பார்ப்போம், விஜய் அரசியலுக்கு வருகிறாரா, அல்லது ரஜினியைப் போல பூச்சாண்டி காட்டுகிறாரா என்று.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...