தமிழ் சினிமாவிம் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அரசியல் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக தன்னை காட்டிகொண்டு வருகிறார். அவரை விட அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் அரசியலில் ஈடுபட வேண்டும், என்பதில் பேரார்வமாக இருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, எஸ்.ஏ.சந்திரசேகர் பா.ஜ.க-வில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை, நேரம் வரும் போது நானும், விஜயும் அரசியலுக்கு வருவோம், அப்படி வரும்போது விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும், என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், விஜய் தனது பனையூர் இல்லத்தில் தனது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை திடீரென்று சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தனது மக்கள் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஜய், மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியைப் போன்று கட்டமைத்திருப்பதாக கூறப்பட்டது. தற்போது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேசியிருப்பதால், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது விஜய், அரசியல் கட்சி தொடங்கி, அரசியலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பார்ப்போம், விஜய் அரசியலுக்கு வருகிறாரா, அல்லது ரஜினியைப் போல பூச்சாண்டி காட்டுகிறாரா என்று.
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...
மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ...