தமிழ் சினிமாவிம் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அரசியல் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக தன்னை காட்டிகொண்டு வருகிறார். அவரை விட அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் அரசியலில் ஈடுபட வேண்டும், என்பதில் பேரார்வமாக இருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, எஸ்.ஏ.சந்திரசேகர் பா.ஜ.க-வில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை, நேரம் வரும் போது நானும், விஜயும் அரசியலுக்கு வருவோம், அப்படி வரும்போது விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும், என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், விஜய் தனது பனையூர் இல்லத்தில் தனது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை திடீரென்று சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தனது மக்கள் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஜய், மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியைப் போன்று கட்டமைத்திருப்பதாக கூறப்பட்டது. தற்போது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேசியிருப்பதால், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது விஜய், அரசியல் கட்சி தொடங்கி, அரசியலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பார்ப்போம், விஜய் அரசியலுக்கு வருகிறாரா, அல்லது ரஜினியைப் போல பூச்சாண்டி காட்டுகிறாரா என்று.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...