தமிழ் சினிமாவிம் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அரசியல் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக தன்னை காட்டிகொண்டு வருகிறார். அவரை விட அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் அரசியலில் ஈடுபட வேண்டும், என்பதில் பேரார்வமாக இருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, எஸ்.ஏ.சந்திரசேகர் பா.ஜ.க-வில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை, நேரம் வரும் போது நானும், விஜயும் அரசியலுக்கு வருவோம், அப்படி வரும்போது விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும், என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், விஜய் தனது பனையூர் இல்லத்தில் தனது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை திடீரென்று சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தனது மக்கள் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஜய், மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியைப் போன்று கட்டமைத்திருப்பதாக கூறப்பட்டது. தற்போது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேசியிருப்பதால், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது விஜய், அரசியல் கட்சி தொடங்கி, அரசியலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பார்ப்போம், விஜய் அரசியலுக்கு வருகிறாரா, அல்லது ரஜினியைப் போல பூச்சாண்டி காட்டுகிறாரா என்று.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...