தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளோடு சில திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில், ஒரே ஷாட்டில் முழு திரைப்படத்தையும் எடுப்பதில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அந்த வரியில், ‘டிராமா’ என்ற திரைப்படமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
’பொல்லாதவன்’ கிஷோர், நகுலன் வின்செண்ட், ஜெய்பாலா, சார்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் ஒரே ஷாட்டில், 8 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 180 நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சியை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குநர் அஜு கூறுகையில், “கிஷோர் , சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததே இந்த படம் வெற்றிகரமாக வந்திருக்கிறது. நாங்கள் நினைத்ததைவிட பிரமாதமாக வந்திருக்கிறது. ஒரே ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல, அதுவும் ஒரு கமர்சியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவுனரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அற்பணிப்பாலும் இந்த முயற்சி மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவத்தைத்தரும்.” என்றார்.
கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்...
‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும்...