தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளோடு சில திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில், ஒரே ஷாட்டில் முழு திரைப்படத்தையும் எடுப்பதில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அந்த வரியில், ‘டிராமா’ என்ற திரைப்படமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
’பொல்லாதவன்’ கிஷோர், நகுலன் வின்செண்ட், ஜெய்பாலா, சார்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் ஒரே ஷாட்டில், 8 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 180 நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சியை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குநர் அஜு கூறுகையில், “கிஷோர் , சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததே இந்த படம் வெற்றிகரமாக வந்திருக்கிறது. நாங்கள் நினைத்ததைவிட பிரமாதமாக வந்திருக்கிறது. ஒரே ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல, அதுவும் ஒரு கமர்சியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவுனரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அற்பணிப்பாலும் இந்த முயற்சி மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவத்தைத்தரும்.” என்றார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது...
இந்திய பொழுதுபோக்குத் துறையின் போக்கையே மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாக, கேமென் ஸ்போர்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (Gammen Sports and Entertainment Pvt...
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில் நடித்த பினு...