Latest News :

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘டிராமா’!
Sunday October-25 2020

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளோடு சில திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில், ஒரே ஷாட்டில் முழு திரைப்படத்தையும் எடுப்பதில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அந்த வரியில், ‘டிராமா’ என்ற திரைப்படமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

 

’பொல்லாதவன்’ கிஷோர், நகுலன் வின்செண்ட், ஜெய்பாலா, சார்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் ஒரே ஷாட்டில், 8 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 180 நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சியை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

 

படம் குறித்து இயக்குநர் அஜு கூறுகையில், “கிஷோர் , சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததே இந்த படம் வெற்றிகரமாக வந்திருக்கிறது. நாங்கள் நினைத்ததைவிட பிரமாதமாக வந்திருக்கிறது. ஒரே ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல,  அதுவும் ஒரு கமர்சியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவுனரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அற்பணிப்பாலும் இந்த முயற்சி மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவத்தைத்தரும்.” என்றார்.

Related News

7013

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery