காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவிய நடிகை குஷ்பு, இன்று காலை திடீரென்று கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்து பெண்கள் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, அவர் மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருமாவளவனின் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் பா.ஜ.க மகளிரணி இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டது. அதன்படி, அக்கட்சியின் இணைந்த நடிகை குஷ்பு, தனது வீட்டில் இருந்து சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு பகுதியில் நடிகை குஷ்புவின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரையும் அவருடன் இருந்த சிலரையும் கைது செய்தனர்.
பாக்ஸ் மூவிஸ் சார்பில் மது தயாரிப்பில் வின்சி பிரான்சிஸ் திரைக்கதையில், மலையாள சினிமா நடன இயக்குநர் ராபின் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘வருத்துப் போக்கு’...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தாய் கிழவி’...
இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது...