காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவிய நடிகை குஷ்பு, இன்று காலை திடீரென்று கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்து பெண்கள் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, அவர் மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருமாவளவனின் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் பா.ஜ.க மகளிரணி இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டது. அதன்படி, அக்கட்சியின் இணைந்த நடிகை குஷ்பு, தனது வீட்டில் இருந்து சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு பகுதியில் நடிகை குஷ்புவின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரையும் அவருடன் இருந்த சிலரையும் கைது செய்தனர்.
டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்" படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது...
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...