காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவிய நடிகை குஷ்பு, இன்று காலை திடீரென்று கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்து பெண்கள் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, அவர் மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருமாவளவனின் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் பா.ஜ.க மகளிரணி இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டது. அதன்படி, அக்கட்சியின் இணைந்த நடிகை குஷ்பு, தனது வீட்டில் இருந்து சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு பகுதியில் நடிகை குஷ்புவின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரையும் அவருடன் இருந்த சிலரையும் கைது செய்தனர்.
இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’...
இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...
நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே...