காதலிக்க மறுத்த பெண் கொலை, திருமணத்திற்கு மறுத்த பெண் கொலை, என்று காதல் விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகை திருமணத்திற்கு மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மால்வி மல்கோத்ரா, பல இந்தி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, இவரது காரை மறித்த யோகேஷ் என்பவர், தன்னை ஒரு தயாரிப்பாளர் என்று கூறியதோடு, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு நடிகை மால்வி மல்கோத்ரா மறுப்பு தெரிவிக்க, உடனே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மல்கோத்ராவின் வயிறு மற்றும் கையில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த மால்வி மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக இருக்கும் யோகேஷை தேடி வருகிறார்கள்.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...