காதலிக்க மறுத்த பெண் கொலை, திருமணத்திற்கு மறுத்த பெண் கொலை, என்று காதல் விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகை திருமணத்திற்கு மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மால்வி மல்கோத்ரா, பல இந்தி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, இவரது காரை மறித்த யோகேஷ் என்பவர், தன்னை ஒரு தயாரிப்பாளர் என்று கூறியதோடு, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு நடிகை மால்வி மல்கோத்ரா மறுப்பு தெரிவிக்க, உடனே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மல்கோத்ராவின் வயிறு மற்றும் கையில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த மால்வி மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக இருக்கும் யோகேஷை தேடி வருகிறார்கள்.
இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’...
இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...
நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே...