காதலிக்க மறுத்த பெண் கொலை, திருமணத்திற்கு மறுத்த பெண் கொலை, என்று காதல் விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகை திருமணத்திற்கு மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மால்வி மல்கோத்ரா, பல இந்தி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, இவரது காரை மறித்த யோகேஷ் என்பவர், தன்னை ஒரு தயாரிப்பாளர் என்று கூறியதோடு, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு நடிகை மால்வி மல்கோத்ரா மறுப்பு தெரிவிக்க, உடனே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மல்கோத்ராவின் வயிறு மற்றும் கையில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த மால்வி மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக இருக்கும் யோகேஷை தேடி வருகிறார்கள்.
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...