கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக உள்ளது. இதன் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்ட டிவி நடிகர் கவினுக்கும், இலங்கை தமிழ்ப் பெண் லொஸ்லியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் தான் மூன்றாவது சீசனையே மிகவும் சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றது.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவினும், லொஸ்லியாவும் தங்களது காதல் குறித்து எதுவும் பேசவில்லை. மேலும், அவர் அவர் வேலையில் மும்முரம் காட்ட தொடங்கி விட்டார்கள். கவின் படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியது போல, லொஸ்லியாவும் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில், லொஸ்லியாவுக்கு அவரது விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லொஸ்லியாவின் தந்தை கனடாவில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் கனடாவில் பணிபுரியும் நண்பரின் மகனை தான் லொஸ்லியாவுக்காக அவர் பார்த்துள்ளாராம்.
லொஸ்லியாவின் திருமணம் பற்றிய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாகவும், விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது...
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’...