கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக உள்ளது. இதன் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்ட டிவி நடிகர் கவினுக்கும், இலங்கை தமிழ்ப் பெண் லொஸ்லியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் தான் மூன்றாவது சீசனையே மிகவும் சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றது.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவினும், லொஸ்லியாவும் தங்களது காதல் குறித்து எதுவும் பேசவில்லை. மேலும், அவர் அவர் வேலையில் மும்முரம் காட்ட தொடங்கி விட்டார்கள். கவின் படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியது போல, லொஸ்லியாவும் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில், லொஸ்லியாவுக்கு அவரது விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லொஸ்லியாவின் தந்தை கனடாவில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் கனடாவில் பணிபுரியும் நண்பரின் மகனை தான் லொஸ்லியாவுக்காக அவர் பார்த்துள்ளாராம்.
லொஸ்லியாவின் திருமணம் பற்றிய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாகவும், விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...