ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் ரிலீஸுக்கு முன்பாகவே தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மாளவிகா மோகனன், தற்போது தனுஷின் 43 வது திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கும் மாளவிகா மோகன், கதாநாயகியாக நடித்த முதல் தமிழ்ப் படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்து வருவதோடு, முன்னணி ஹீரோக்களும் அவரை நாயகியாக தேர்வு செய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இப்படி எடுத்த எடுப்பிலேயே முன்னணி ஹீரோக்களின் படங்களில் மாளவிகா மோகனன் கமிட்டாவதற்கு காரணம், அவரது கவர்ச்சி புகைப்படங்கள் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. படங்களை விட தனது கவர்ச்சிப் புகைப்படங்களை தான் மாளவிகா மோகனன் அதிகமாக நம்பியிருக்கிறார். அவர் அவ்வபோது தனது கவர்ச்சி மற்றும் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா பிரபலங்களையும் ஈர்த்து வருகிறார்.

மேலும், தனுஷுடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடித்து விட வேண்டும் என்பது தான் தனது ஆசை, என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓபனாக கூறியிருந்தார். அவரது இந்த ஓபன் டைப்புக்கு தான் தனுஷும் அவரை தனது 43 வது படத்தில் கதாநாயகியாக டிக் அடித்துள்ளார்.
மொத்தத்தில், உடையாக இருந்தாலும் சரி, பேச்சாக இருந்தாலும் சரி, அனைத்திலும் ஓபனாக இருப்பதால் தான் மாளவிகா மோகனனுக்கு தனுஷ் பட வாய்ப்பு கிடைத்ததாம்.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...