Latest News :

நடிகர் ஜெய் மீது புது வழக்கு - சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு!
Sunday September-24 2017

கடந்த விழாயக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய்யை அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

இந்த விபத்தில் ஜெய்க்கும், அவருடன் காரில் இருந்த நடிகர் பிரேம்ஜிக்கும் எந்த விபத்தும் ஏற்பட வில்லை என்றாலும், ஜெய்யின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் போலீஸ் இருப்பதாக கூறப்படுகிறது.

 

இதற்கு முன்பாக, இரண்டு முறை மது குடித்து வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அபராதம் கட்டியுள்ள ஜெய், தற்போது மூன்றாவது முறையாக மது குடித்து வாககன் ஓட்டியிருப்பதால் அவரது ஓட்டுநர் உரிமைத்தை ரத்து செய்யும்படி, அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், திருவான்மியூரா ஆர்.டி.ஓ-வுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், போலீசிடம் ஜெய் பிடிபட்ட போது அவரிடம் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லையாம். அதேபோல், காரின் ஆர்.சி புத்தகம் இல்லாததோடு, இன்சூரன்ஸும் புதுப்பிக்கப்படாததால், காரின் நம்பர் பிளேட்டும் விதிமுறைகளை மீறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அடையாறு போக்குவரத்து போலீசார் ஜெய் மீது தனியாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்ய உள்ளனர்.]

 

அப்படி, போலீசார் புதிய வழக்கு பதிவு செய்து, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, நடிகர் ஜெய்க்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

Related News

703

நான் இங்கு நிற்க விஜயகாந்த் தான் காரணம் - ‘எல்.எஸ்.எஸ்’ பட இயக்குநர் உருக்கம்
Monday February-16 2026

ஜெ.பி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில், ஆர்...

குழந்தைகளின் கற்றலுக்கான ‘கலர் பென்சில்’! - 'கிகி & கொகொ' பட தயாரிப்பாளர்களின் புதிய முயற்சி
Monday February-16 2026

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது...

விவசாயிகளின் உரிமையை பேசும் ’அரிசி’ நிச்சயம் வெல்லும் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Monday February-16 2026

மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி...

Recent Gallery