பிக் பாஸ் சீசன் 4 போட்டி தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்களில் ரேகா முதலில் வெளியேற்றப்பட்ட நிலையில், இரண்டாவது நபராக பாடகர் வேல்முருகன் வெளியேற்றப்பட்டு விட்டார். அதே சமயம், புதிய போட்டியாளராக பாடகி சுசித்ரா வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.
இந்த நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்காக இரண்டு பேர்களை தேர்வு செய்யுமாறு போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் உத்தரவிடுகிறார். அதில் ஒரு குரூப்பினர் அர்ச்சனாவையும், மற்றொருவர் ஆரியையும் தேர்வு செய்துள்ளார்கள்.

பிக் பாஸ் 4-ன் முக்கிய போட்டியாளர்களாக திகழும் அர்ச்சனா மற்றும் ஆரி இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட்டாலும், அது நிகழ்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதே சமயம், அர்ச்சனா மற்றும் ஆரிக்கு பதில் வேறு சில புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழை இருப்பதாகவும், அதனால் தான் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரை வெளியேற்ற பிக் பாஸ் குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...