தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வரும் திரிஷாவின் முன்னாள் காதலர் மீது சென்னை கிண்டி காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னையை சேர்ந்த தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியன் என்பவரும் திரிஷாவும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருமணம் நின்றுபோனது.
இந்த நிலையில், சென்னையில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் வருண் மணியனிடம், நிலம் வாங்க வெங்கடேசன் என்பவர் ரூ.4 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர் முழு தொகையை கொடுப்பதற்குள் வருண் மணியன், அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், வெங்கடேசன் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகை ரூ.4 லட்சத்தை திருப்பி கேட்டபோது, வருண் மணியன் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வெங்கடேசன் கிண்டி காவல் நிலையத்தில் வருண் மணியம் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பண மோசடி, கொலை மிரட்டல், ஏமாற்றுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...