விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக ஏ.ஆர்.ராஜேந்திரன், என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, படத்திற்கு இடைக்கால தடையும் வாங்கிவிட்டார்.
முகம் தெரியாத இந்த ராஜேந்திரன், தான் தயாரிக்க இருந்த ‘மெர்சலாயிட்டேன்’ படம், விஜயால் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, என்றும் நீதிமன்ற மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பில், அறிமுக நடிகர் ஒருவர் இருப்பது போன்ற போஸ்டரையும் பத்திரிகையாளர்களுக்கு பி.ஆர்.ஓ மூலம் ராஜேந்திரன் அனுப்பியுள்ளார்.
அதில், கென் மீடியா கருணாஸ் வழங்கும் என்ற வாக்கியம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. காரணம், இந்த கென் மீடியா காமெடி நடிகரும், அதிமுக எம்.எல்.ஏ-வுமான கருணாஸின் நிறுவனமாகும்.
எனவே, விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு, மூல காரணம் நடிகர் கருணாஸாக இருப்பாரோ!, என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...