தொலைக்காட்சி ரசிகர்களின் நம்பர் ஒன் பேவரைட் நிகழ்ச்சியாக உள்ள பிக் பாஸின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மூன்று சீசன்களைக் காட்டிலும் இந்த நான்காவது சீசனில் சுவாரஸ்யம் சற்று குறைவாக இருப்பதாக கருத்து நிலவி வரும் நிலையில், நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்களை செய்து, சுவாரஸ்யத்தை கூட்டும் வேலைகளில் தயாரிப்பு குழு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றான எலிமினேஷன் ரவுண்ட் இந்த வாரம் உள்ளது. அதன்படி, இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார். தற்போது எலிமினேஷன் பட்டியலில் சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், அரந்தாங்கி நிஷா ஆகிய மூன்று பேர் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் தான் இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார், என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், அந்த ஒருவர் யார்? என்ற ரகசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆம், இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகர் ஜித்தன் ரமேஷ் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டியின் ஆரம்பத்தில் இருந்து ஜித்தன் ரமேஷ் எந்தவித ஈடுபாடும் காட்டாமல், அமைதியாக இருந்தது ஒரு பக்கம் இருக்க, அவருக்கான வாக்குகளும் குறைந்ததால், அவரை போட்டியில் இருந்து தயாரிப்பு குழு நீக்கியுள்ளது.
எனவே, இன்று ஜித்தன் ரமேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதோடு, புதிய போட்டியாளர் குறித்த அறிவிப்பும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...