’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பிரபலம் சித்ரா, நேற்று இரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு, ஓட்டலில் ஒதுக்கப்பட்டுள்ள தனட்து ஓய்வு அறைக்கு அதிகாலை 2.30 மணிக்கு சென்றவர், திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த தொழிலதிபரான ஹேமந்த் என்பவர், அவருடன் ஓட்டல் அறையில் ஒன்றாக தங்கியிருக்கிறார். பிறகு அவர்களுக்குள் ஏதோ மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, தான் உடை மாற்ற வேண்டும், வெளியே இருங்கள், என்று ஹேமந்தை சித்ரா வெளியேற்றியுள்ளார்.
நெடுநேரம் ஆகியும் சித்ரா அறையில் கதவை திறக்காததால், ஓட்டல் ஊழியர்களிடம் ஹேமந்த் விஷயத்தை சொல்ல, அவர்கள் அறையின் மற்றொரு சாவியை போட்டு கதவறை திறந்து பார்த்த போது, சித்ரா அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அவரது உடலை பார்த்த போது, அவரது மரணம் கொலையாக இருக்குமோ, என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அவரது முகத்தில் இரண்டு இடத்தில் காயங்கள் இருப்பதோடு, தூக்கிட்டு கொண்டதற்கான அடையாளம் கழுத்துப் பகுதியில் இல்லை, என்றும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, சித்ராவின் மரணத்தை தற்கொலை என்ற கோணத்தில் விசாரிக்காமல், சந்தேக மரணம் உள்ளிட்ட பல கோணங்களில் விசாரிக்க வேண்டும், என்று திரையுலக பிரபலங்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...