தொலைக்காட்சி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி அதிகாலை தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தற்கொலையில் பல மர்மங்கள் இருப்பதாக, சித்ராவின் நண்பர்களான சில சீரியல் நடிகர், நடிகைகள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
மேலும், சித்ராவின் தாயும், அவரது கணவர் ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டி வரும் நிலையில், சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார். நேற்று சித்ராவின் தாய், தந்தை சகோதரர் மற்றும் சகோதரி என சித்ராவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இன்று சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்த இருந்த நிலையில், திடீரென சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக நசரத்பேட்டை காவல்துறையினர் ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...