Latest News :

தமிழர்களை அவமதித்த தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு!
Monday September-25 2017

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் வரும் 29 ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆவதோடு, அதே நாளில் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழகத்திலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஹிரோ மகேஷ் பாபு, ஹீரோயின் ரகுல்ப்ரீத் சிங், வில்லன் எஸ்.ஜே.சூர்ய, பரத், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தமிழில் பேசினாலும், நிகழ்ச்சி முடிந்த பிறகு தினசரி பத்திரிகைகள் பேட்டி கேட்ட போது, தமிழ் பத்திரிகைகளை தவிர்த்துவிட்டு ஆங்கில பத்திரிகைகளுக்கு மட்டும் பேட்டி கொடுத்தாராம்.

 

மகேஷ் பாபுவிடம் தினசரி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். பிறகு எந்த எந்த பத்திரிகைகள் என்று பட்டியலும் கொடுக்கப்பட்டதாம். அந்த பட்டியலில் இருந்த தமிழ் பத்திரிகைகளை நிராகரித்த மகேஷ் பாபு, சில ஆங்கில பத்திரிகைகளின் நிருபர்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்தாராம். மகேஷ் பாபுவின் இத்தகைய செயல் தமிழ் பத்திரிகைகளை மட்டுமல்ல தமிழர்களையே அவமதித்ததற்கு சமம் என்று பேசிக்கொண்ட நிருபர்கள், இந்த டப்பிங் படம் தமிழகத்தில் ஓடாது...என்று கூறி தங்களது கோபத்தை வெளிக்காட்டி கொண்டார்கள்.

 

ஏற்கனவே, தமிழ் ஊடகங்களை அவமதித்து வந்த மகேஷ் பாபு, தமிழ் நன்றாக பேச தெரிந்தாலும், எந்த இடத்திலும் தமிழ் பேசமாமல், தமிழக ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையும் தவிர்த்து வந்தவர் தான். தற்போது தமிழ் சினிமாவும், அதன் வியாபாரமும் பெரிய அளவில் உயர்ந்திருப்பதால், தனது படத்தை டப் செய்து கல்லா கட்ட முயற்சிக்கும் அவர், தமிழக ரசிகர்களை கவர்வதற்காக, இப்போது மேடையில் தமிழில் பேசினாலும், மறைமுகமாக இப்போதும் தமிழர்களை அவமதிக்கும் சில செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டு தான் வருகிறார்.

Related News

714

நான் இங்கு நிற்க விஜயகாந்த் தான் காரணம் - ‘எல்.எஸ்.எஸ்’ பட இயக்குநர் உருக்கம்
Monday February-16 2026

ஜெ.பி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில், ஆர்...

குழந்தைகளின் கற்றலுக்கான ‘கலர் பென்சில்’! - 'கிகி & கொகொ' பட தயாரிப்பாளர்களின் புதிய முயற்சி
Monday February-16 2026

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது...

விவசாயிகளின் உரிமையை பேசும் ’அரிசி’ நிச்சயம் வெல்லும் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Monday February-16 2026

மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி...

Recent Gallery