தமிழ் பிக் பாஸின் சீசன் 4 70 நாட்களை கடந்திருக்கும் நிலையில், நேற்று 10 வது போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியொர் வெளியேறியுள்ள நிலையில், நேற்று அர்ச்சனா வெளியேற்றபட்டார்.
கடந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டில் ஆரி, அஜீத், அனிதா அர்ச்சனா, ரியோ, ஷிவானி, சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில், குறைவான வாக்குகள் பெற்றதால் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.
இதற்கிடையே, அர்ச்சனாவுக்கு கிடைத்த தலைவர் பதவி அவர் வெளியேறியதால், பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷனில் இருந்து பாலாஜி தப்பித்துவிட்டார்.
இந்த நிலையில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமிஷேனில் மீண்டும் ஆரி, அஜித், ஷிவானி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். அதிலும், கடந்த முறை ஆரியின் பெயரை நாமினேட் செய்த ரியோ, இந்த முறையும் ஆரியை நாமினேட் செய்திருக்கிறார். அர்ச்சனா வெளியேறியதால் கடுப்பாகியுள்ள ரியோ, எப்படியாவது ஆரியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே அவருடைய பெயரை திரும்ப திரும்ப நாமினேட் செய்து வருகிறார்.
ஏற்கனவே, ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் ரியோ, தொடர்ந்து ஆரியை கார்னர் செய்து வருவதாலும், தற்போதைய செயலாலும் அவர் மேலும் மேலும் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.
மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...