தமிழ் சினிமாவில் இளம் நடிகர், நடிகைகளின் திடீர் மரணம் தொடர்ந்துக் கொண்டிருப்பது ரசிகர்களையும், திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், விஜய், நயன்தாரா படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் அருண் அலெக்சாண்டரின் திடீர் மரணம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல டப்பிங் கலைஞரான அருண் அலெக்சாண்டர், லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ‘கோலமாவு கோகிலா’, ‘கைதி’, ‘பிகில்’, ‘ஜடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களிலும் நடித்து வந்தார்.
தற்போது சந்தானத்தின் ‘டிக்கிலோனா’, ‘சவாரி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் அருண் அலெக்சாண்டருக்கு நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அருண் அலெக்சாண்டரின் இழப்பால் தமிழ் திரையுலகினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...