தமிழ் சினிமாவில் இளம் நடிகர், நடிகைகளின் திடீர் மரணம் தொடர்ந்துக் கொண்டிருப்பது ரசிகர்களையும், திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், விஜய், நயன்தாரா படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் அருண் அலெக்சாண்டரின் திடீர் மரணம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல டப்பிங் கலைஞரான அருண் அலெக்சாண்டர், லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ‘கோலமாவு கோகிலா’, ‘கைதி’, ‘பிகில்’, ‘ஜடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களிலும் நடித்து வந்தார்.
தற்போது சந்தானத்தின் ‘டிக்கிலோனா’, ‘சவாரி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் அருண் அலெக்சாண்டருக்கு நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அருண் அலெக்சாண்டரின் இழப்பால் தமிழ் திரையுலகினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...