சித்ரா தற்கொலை வழக்கில் புது திருப்பம்! - முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல முயற்சி
Thursday December-31 2020

சீரியல் நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டார். சீரியல் படப்பிடிப்பு முடித்துவிட்டு இரவு ஓய்வு விடுதிக்கு சென்றவர், அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறை சித்ரா, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தது.

 

இதற்கிடையே, சித்ரா தற்கொலை வழக்கை விசாரணை செய்த ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் சித்ராவின் குடும்பத்தார் மற்றும் அவரது கணவரின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவின் நண்பர்கள் மற்றும் ஹேம்நாத்தின் நண்பர்கள் என மொத்தம் 16 பேரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், சித்ராவின் விசாரணை சரியான முறையில் நடைபெறவில்லை என்று கூறும் அவரது தாய் விஜயா, சித்ரா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும், என்று முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். இதன் மூலம் சித்ராவின் தற்கொலை வழக்கை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சித்ராவின் தாய் ஈடுபட்டுள்ளார்.

 

ஏற்கனவே சித்ராவை அரசியல்வாதி ஒருவர் மிரட்டி வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், சித்ராவின் தாய் முதல்வரின் தனிப்பிரிவில் சித்ராவின் தற்கொலை குறித்து மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

7175

நான் ஆசைப்பட்ட திரைப்படம் ‘நீளிரா’! - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி
Saturday March-21 2026

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல! - பரத் உறுதி
Saturday March-21 2026

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என்...

பாரம்பரியமான ஆடைகள் தான் பிடிக்கும் - நடிகை காயடு லோஹர்
Saturday March-21 2026

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...

Recent Gallery