Latest News :

சித்ரா தற்கொலை வழக்கில் புது திருப்பம்! - முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல முயற்சி
Thursday December-31 2020

சீரியல் நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டார். சீரியல் படப்பிடிப்பு முடித்துவிட்டு இரவு ஓய்வு விடுதிக்கு சென்றவர், அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறை சித்ரா, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தது.

 

இதற்கிடையே, சித்ரா தற்கொலை வழக்கை விசாரணை செய்த ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் சித்ராவின் குடும்பத்தார் மற்றும் அவரது கணவரின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவின் நண்பர்கள் மற்றும் ஹேம்நாத்தின் நண்பர்கள் என மொத்தம் 16 பேரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், சித்ராவின் விசாரணை சரியான முறையில் நடைபெறவில்லை என்று கூறும் அவரது தாய் விஜயா, சித்ரா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும், என்று முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். இதன் மூலம் சித்ராவின் தற்கொலை வழக்கை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சித்ராவின் தாய் ஈடுபட்டுள்ளார்.

 

ஏற்கனவே சித்ராவை அரசியல்வாதி ஒருவர் மிரட்டி வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், சித்ராவின் தாய் முதல்வரின் தனிப்பிரிவில் சித்ராவின் தற்கொலை குறித்து மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

7175

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!
Wednesday November-19 2025

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

Recent Gallery