Latest News :

கோடங்கி, ஒற்றன் கூட்டணியில் உருவான ‘மலர்’ குறும்படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸ்
Friday January-01 2021

பிரபல பத்திரிகையாளர்கள் கோடங்கி ஆபிரகாமும், ஒற்றன் துரையும், காரில் பயணித்துக் கொண்டே பலரை பதற வைப்பவர்கள். இவர்கள் கார் பயணத்தை தொடங்கினாலே பலருக்கு பதட்ட நிலைக்கு சென்றுவிடுவார்கள். அந்த அளவுக்கு உண்மை செய்திகளை உரக்க சொல்வதில் வல்லமை படைத்தவர்கள்.

 

ஊடகத்துறையில் ஒன்றாக பயணித்த இவர்களது பயணம், தற்போது திரைத்துறையிலும் தொடர உள்ளது. அதன் முதல்படியாக இவர்களது கூட்டணியில் குறும்படம் ஒன்று உருவாகியுள்ளது.

 

‘மலர்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இக்குறும்படம், சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார், என்பதை பற்றி பேசுகிறது. 

 

கயல்விழி என்ற புதுமுக நடிகை ’மலர்’ குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களோடு ’திடீர் தளபதி’ சதீஷ் முத்து, ஜோயல், ஹிதயத்துல்லா, ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

‘மலர்’ குறும்படத்தின் டைடில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட, புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், கோடங்கி ஆபிரகாம், ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

Malar

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ‘மலர்’ குறும்படத்தை இயக்கியிருக்கும் கோடங்கி ஆபிரகாம், ஏற்கனவே பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ஆவணபடத்தை இயக்கியுள்ளார்.

 

அனீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த குறும்படத்திற்கு விசு இசையமைத்திருக்கிறார். யுவராஜ் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

 

ருச்சி சினிமாஸ் மற்றும் பாஸ்ட் மெஸெஞ்சர் இணைந்து வழங்க, பி.சுமித்ரா தயாரித்திருக்கும் ‘மலர்’ குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related News

7178

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் படத்தில் நடிகை நயன்தாரா இணைந்தார்!
Wednesday November-19 2025

அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார்...

’டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படங்களின் அறிவிப்பு விழா
Wednesday November-19 2025

லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’...

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

Recent Gallery