’காதல் ரோஜாவே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான பூஜா குமார், அப்படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பினார். ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’, ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையே, கமல்ஹாசனையும், பூஜா குமாரையும் இணைத்து சில கிசுகிசுக்கள் வெளியானது. மேலும், கமல்ஹாசனின் குடும்ப புகைப்படம் ஒன்றில் பூஜா குமாரும் இடம்பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியதும் பூஜா குமார் காணாமல் போய்விட்டார்.
இந்த நிலையில், பூஜா குமார் திருமணமாகி, பெண் குழந்தைக்கு தாயாகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பூஜா குமாருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலையும், புகைப்படத்தையும் பூஜா குமாரின் கணவர் வெளியிட, அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,

அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார்...
லத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’...
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...