தென்னிந்திய திரை கலைஞர்களை கெளரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2020 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், தமிழ் சினிமாவுக்கான விருதுகளில், பன்முகத்தன்மை வாய்ந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் அஜித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகராக ‘அசுரன்’ படத்திற்காக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதுக்கு ‘ராட்சசி’ படத்திற்காக ஜோதிகா தேர்வாகியுள்ளார்.
சிறந்த இயக்குநர் விருதுக்கு ‘ஒத்தசெருப்பு சைஸ் 7’ படத்திற்காக ஆர்.பார்த்திபனும், சிறந்த படமாக ‘டூ லெட்’, சிறந்த இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி சினிமாவை சேர்ந்த கலைஞர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார்...
லத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’...
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...