தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வந்தாலும், முந்தைய சீசன்களைப் போல் நிகழ்ச்சியில் எவ்வித சுவாரஸ்யமும் இல்லை. நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டுவதற்காக தயாரிப்பு தரப்பு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே போட்டியாளர்களில் மூத்தவர்களை வெளியேற்றிய நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பு, தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை வைத்து நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்ட சில யுக்திகளை கையாள தொடங்கியுள்ளது. அதன் முதல்படியாக பாலாஜி, ஷிவாணி இடையே காதல், அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஷிவாணியின் அம்மா அவரை தாறுமாறாக திட்டுவது போன்ற டிராமாக்கள் அரங்கேற தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ஷிவாணி, பாலாஜி காதல் விவகாரத்தில் தலையிட்ட ஆரியை பாலாஜி அடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய எப்பிசோட்டில் பாலாஜியிடம் ஆரி அடி வாங்குவாரா, இல்லையா என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதோ அந்த புரோமோ,
அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார்...
லத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’...
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...