ஆரியுடன் மோதலில் ஈடுபட்ட பாலாவுக்கு நேர்ந்த சோகம்! - பதற்றத்தில் பிக் பாஸ் வீடு
Sunday January-03 2021

தமிழ் பிக் பாஸ் சீசன் 4 தற்போது முடியும் தருவாயை எட்டியுள்ளது. தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், நிகழ்ச்சி இன்னும் 10 நாட்கள் மட்டுமே தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, இறுதிச் சுற்றுக்கான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு 100 வது நாளில் போட்டி முடிவடைய உள்ளது.

 

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலாஜி, ஷிவாணி காதல் விவகாரம் குறித்து பேசிய ஆரி மீது பெரும் கோபமடைந்த பாலா, அவரை அடிக்காத குறையாக தனது கோபத்தை வெளிப்படுத்தியதோடு, “வெளியே இருந்தா நான் கொடுக்கும் மரியாதை வேறு” என்று அவரை மிரட்டவும் செய்தார்.

 

பாலாவின் இத்தகைய நடவடிக்கையால் அவருக்கு எதிர்ப்பு வலுத்திருப்பதோடு, அவருக்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும், என்றும் பலர் கூறி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், ரகசிய அறையில் வைத்து பாலாவை கமல்ஹாசன் இன்று விசாரிக்கிறார். விசாரணை முடிவில் அவரை அப்படியே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆஜித் நேற்று வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related News

7188

நான் ஆசைப்பட்ட திரைப்படம் ‘நீளிரா’! - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி
Saturday March-21 2026

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல! - பரத் உறுதி
Saturday March-21 2026

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என்...

பாரம்பரியமான ஆடைகள் தான் பிடிக்கும் - நடிகை காயடு லோஹர்
Saturday March-21 2026

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...

Recent Gallery