தமிழ் பிக் பாஸ் சீசன் 4 தற்போது முடியும் தருவாயை எட்டியுள்ளது. தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், நிகழ்ச்சி இன்னும் 10 நாட்கள் மட்டுமே தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, இறுதிச் சுற்றுக்கான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு 100 வது நாளில் போட்டி முடிவடைய உள்ளது.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலாஜி, ஷிவாணி காதல் விவகாரம் குறித்து பேசிய ஆரி மீது பெரும் கோபமடைந்த பாலா, அவரை அடிக்காத குறையாக தனது கோபத்தை வெளிப்படுத்தியதோடு, “வெளியே இருந்தா நான் கொடுக்கும் மரியாதை வேறு” என்று அவரை மிரட்டவும் செய்தார்.
பாலாவின் இத்தகைய நடவடிக்கையால் அவருக்கு எதிர்ப்பு வலுத்திருப்பதோடு, அவருக்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும், என்றும் பலர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், ரகசிய அறையில் வைத்து பாலாவை கமல்ஹாசன் இன்று விசாரிக்கிறார். விசாரணை முடிவில் அவரை அப்படியே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆஜித் நேற்று வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’...
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...