’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
Monday January-04 2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மக்களின் பேவரைட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து வந்த சித்ரா, சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் கதாப்பாத்திரங்களிலேயே சித்ராவின் முல்லை கதாப்பாத்திரம் தான் பேவரைட்டாக இருந்தது. சித்ராவின் திடீர் மறைவால் சற்று தடுமாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குழு தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் காவ்யா என்ற நடிகையை நடிக்க வைத்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் வரும் பொங்கல் பண்டியுடன் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இடம்பெறும் குடும்பங்கள் ஒன்றாக இணைவதால் தொடர் முடிவடைய இருப்பதாகவும்  சொல்லப்படுகிறது.

 

ஆனால், இது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், விஜய் தொலைக்காட்சியின் முக்கியமான தொடராக இருக்கும் ‘பாண்டியன்ஸ் டோர்ஸ்’ தொடரை திடீரென்று நிறுத்துவதற்கும் வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், சீரியல் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் தவறானது என்றும் கூறப்படுகிறது.

Related News

7189

நான் ஆசைப்பட்ட திரைப்படம் ‘நீளிரா’! - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி
Saturday March-21 2026

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல! - பரத் உறுதி
Saturday March-21 2026

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என்...

பாரம்பரியமான ஆடைகள் தான் பிடிக்கும் - நடிகை காயடு லோஹர்
Saturday March-21 2026

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...

Recent Gallery