Latest News :

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் இவர் தான்!
Friday January-08 2021

தமிழ் பிக் பாஸின் நான்காவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 90 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், இன்னும் 10 நாட்களில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. தற்போது இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்பவர்களை தேர்வு செய்யும் டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. இதில் ரியோ அதிக புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

 

இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரசிகர்களின் வாக்குகளை வைத்து பார்க்கும் போது, எப்போதும் போல ஆரி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து பாலா, ரியோ, கேப்ரில்லா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளார்கள்.

 

கடைசி இரண்டு இடங்களில் ரம்யா மற்றும் ஷிவாணி உள்ளனர். எனவே இவர்கள் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து  வெளியேறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்ற வாய்ப்பு இருப்பதால், இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியேறலாம். அதே சமயம், ஒரு போட்டியாளரை மட்டும் வெளியேற்றினால், மிக குறைவான வாக்குகள் பெற்ற ஷிவாணி வெளியேற்றப்படுவார்.

 

Related News

7200

’டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படங்களின் அறிவிப்பு விழா
Wednesday November-19 2025

லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’...

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

Recent Gallery