Latest News :

பிக் பாஸ் இறுதிச் சுற்றில் திடீர் திருப்பம்! - பணம் பெற்றுக்கொண்டு இவர் வெளியேறினாரா?
Thursday January-14 2021

தமிழ் பிக் பாஸ் சீசன் 4 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. தற்போது பழைய போட்டியாளர்கள் விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்திருப்பதோடு, தற்போதைய போட்டியாளர்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகிறார்கள். வரும் ஜனவரி 17 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று நடைபெற உள்ளது.

 

இந்த இறுதிச் சுற்றில் வெற்றிப் பெறப்போவது யார்? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் ஆரி இருக்கிறார். இதனால், ஆரி தான் சீசன் 4 பிக் பாஸின் வெற்றியாளராக வருவார், என்று பலரால் கூறப்படுகிறது.

 

அதே சமயம், ரசிகர்களின் வாக்குகளை மட்டுமே வைத்து பிக் பாஸில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படவில்லை என்றும், நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பு, ஸ்பான்சர்கள் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் வெற்றியாரை நிர்ணயிக்க கூடிய இடத்தில் இருப்பதால், வெற்றியாளர் விஷயத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட பல வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இறுதிச் சுற்றுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஒரு குறிப்பிட்ட தொகை பணம் கொடுத்து, விருப்பம் உள்ளவர்கள் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு கொடுக்கப்படும். கடந்த சீசனில் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான கவின், ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.

 

தற்போது, அதே வாய்ப்பு போட்டியாளர்களுக்கு வழங்க, ரம்யா பாண்டியன் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

 

Ramya Pandian in Big Boss

 

காரணம், தற்போதைய பிக் பாஸில் வெற்றியாளராக ஆரி தான் வருவார் என்று பெரும்பாலனவர்களுக்கு கருத்து கூறி வருகிறார்கள். அப்படி ஆரி இல்லை என்றால் பாலாஜி அல்லது சோம்சேகர் ஆகியோரில் ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்கள் வெற்றியாளராக ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. இந்த காரணத்தினால் தான் ரம்யா பாண்டியன் கிடைக்கும் பணத்தை பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறிவிட்டாராம்.

 

ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. அதே சமயம், இதன் உண்மை நிலை நாளை அல்லது சனிக்கிழமை தெரிந்துவிடும்.

Related News

7216

’சாருகேசி’ படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது - நடிகை சுஹாசினி நெகிழ்ச்சி
Tuesday June-24 2025

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் - ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு
Monday June-23 2025

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...

பார்வையாளர்களின் இதயத்தை மாற்றக்கூடிய படமாக ‘குட் டே’ இருக்கும் - இயக்குநர் ராஜு முருகன்
Sunday June-22 2025

நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க,  அறிமுக இயக்குநர் என்...

Recent Gallery