விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் படத்தை ரிலீஸ் செய்து வசூலை அள்ளிவிட வேண்டும் என்று தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, படத்திற்கு எதிராக ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை வாங்கிவிட்டார்.
இதனால், ‘மெர்சல்’ என்ற தலைப்பை மாற்றிவிட்டு ‘ஆளப்போறான் தமிழன்’ என்று தலைப்பு வைக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘மெர்சல்’ பட்த்திற்கு போட்டியாக தீபாவளியன்று ‘கொடிவீரன்’ படத்தை ரிலீஸ் செய்ய சசிகுமார் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ மெர்சலுடன் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் சிவகார்த்திகேயன் பின்வாங்கிவிட்ட நிலையில், சசிகுமார் விஜயுடன் மோத முடிவு செய்துவிட்டார்.
மெர்சல் படத்தை தமிழகம் முழுவதும் சுமார் 800 திரையரங்கங்களில் வெளியிட ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே சமயம், தனது படம் மிக சிறப்பாக வந்துள்ளதாக கூறிய சசிகுமார், அதன் தைரியத்திலேயே மெர்சல் படத்துடன் மோதுகிறேன், என்றும் கூறியுள்ளார்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...