விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி, ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘க/பெ.ரணசிங்கம்’. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விருமாண்டி, தனது முதல் படத்திலேயே இதுவரை சினிமாவில் சொல்லப்படாத உண்மை சம்பவம் ஒன்றை சொல்லி, விமர்சன ரீதியாகவும், வியாபர ரீதியாகவும் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், தனது இரண்டாவது படத்தின் மூலம் இயக்குநர் விருமாண்டி, சசிகுமாருடன் கைகோர்த்துள்ளார். சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இப்படமும் உண்மை சம்பவத்தை மையப்படுத்திய கதை தான்.
1975 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தை, பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் தயாரிக்கிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, டி.சிவாநாதீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த கதையை கேட்டவுடன் சசிகுமார் ஒகே சொல்லிவிட்டார். தற்போது படத்தின் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் படத்திற்கான பூஜை எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில், ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...