Latest News :

அடிமேல் அடி! - அதிர்ச்சியில் ‘ஈஸ்வரன்’ படக்குழு
Thursday January-21 2021

நடிகர் சிம்பு தன் மீது இருந்த தவறான பார்வையை அகற்றி புதிய அவதாரம் எடுத்து, தான் நடிக்கும் படங்களில் படப்பிடிப்புகளை விரைவாக முடித்துக் கொடுக்கிறார். அந்த வகையில், மிக குறுகிய காலத்தில் சிம்பு முடித்த படம் தான் ‘ஈஸ்வரன்’. சுசீந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்க, இயக்குநர் பாரதிராஜா முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

 

இப்படம் பொங்கல் பண்டிகையான ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பு, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது அளித்த புகார் குறித்து விசாரணை நடத்திய தயாரிப்பாளர்கள் சங்கம், சிம்பு மைக்கேல் ராயப்பனுக்கு இழப்பீடு கொடுத்தால் தான் ‘ஈஸ்வரன்’ ரிலீஸாக முடியும், என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், பலக்கட்ட பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு படம் வெளியானது.

 

இதற்கிடையே, விஜயின் மாஸ்டர் படத்தை திரையிட ஆர்வம் காட்டிய திரையரங்க உரிமையாளர்கள் ‘ஈஸ்வரன்’ படத்திற்கு திரையரங்குகளை ஒதுக்க தயக்கம் காட்டினார்கள். இதனால், எதிர்ப்பார்த்த அளவுக்கு திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்றாலும், ரிலீஸ் குறித்து அறிவித்துவிட்டதால், கிடைத்த திரையரங்குகளில் ஈஸ்வரன் படம் ரிலீஸ் ஆனாது.

 

அனைவரும் எதிர்ப்பார்த்தது போல, ஈஸ்வரன் சுமாருக்கும் கீழ் என்ற விமர்சனத்தோடு, படு சுமாரான வசூலைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

இந்த நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விற்பதற்கும் நடவடிக்கையில் இறங்கிய படக்குழுவினர், முன்னணி சேனல் ஒன்றை அனுகியபோது, அவர்கள் என்ன விலை? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு படக்குழு ரூ.10 கோடி விலை சொல்ல, அவர்கள் மேலிடத்தில் பேசிவிட்டு சொல்கிறோம், என்று கூறியிருக்கிறார்கள்.

 

அதன் பிறகு தொலைக்காட்சி தரப்பை தொடர்பு கொண்ட ஈஸ்வரன் படக்குழுவுக்கு பெருத்த ஏமாற்றம். காரணம், தொலைக்காட்சி தரப்பு ஈஸ்வரன் படக்குழுவின் தொலைபேசி அழைப்பையே நிராகரித்து வந்ததாம். ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி மேலாதிரிகாரியை பிடித்த ஈஸ்வரன் படக்குழு, விலை குறித்து கேட்க, ரூ.1 கோடி என்றால் வாங்கலாம், என்று மேலிடம் சொன்னதாக தெரிய, அதிர்ச்சியில் உரைந்த ஈஸ்வரன் படக்குழு, இன்னும் அதில் இருந்து மீளவில்லையாம்.

 

Related News

7235

’சாருகேசி’ படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது - நடிகை சுஹாசினி நெகிழ்ச்சி
Tuesday June-24 2025

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் - ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு
Monday June-23 2025

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...

பார்வையாளர்களின் இதயத்தை மாற்றக்கூடிய படமாக ‘குட் டே’ இருக்கும் - இயக்குநர் ராஜு முருகன்
Sunday June-22 2025

நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க,  அறிமுக இயக்குநர் என்...

Recent Gallery