விதார்த், இயக்குநர் பாரதிராஜா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டெல்னா டேவிஸ். மலையாள நடிகையான இவர், தமிழில் ‘பத்ரா’, ‘விடியும் வரை பேசு’, ‘ஆக்கம்’, ‘49ஓ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், ‘குரங்கு பொம்மை’ படம் மூலம் தான் சற்று பிரபலமானார்.
இதற்கிடையே, திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கியவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சீரியல் படப்பிடிப்பில் நடிகை டெல்னா டேவிஸ், சக நடிகர் ஒருவரை அவமானபடுத்திய சம்பம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை உள்ள படப்பிடிப்பு வீடு ஒன்றில் ‘அன்பே வா’ தொடர் படமாக்கப்பட்டு வருகிறது. டெல்னா டேவிஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, மற்றொரு நடிகர் தனது காட்சிக்கு தயாராவதற்காக மேக்கப் அறையில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது டெல்னா டேவிஸ், அந்த அறையை தன்னை தவிர யாரும் பயன்படுத்தக்கூடாது, என்று கூறி அந்த நடிகரை வெளியேற சொல்லியிருக்கிறார்.
அந்த நடிகரோ, ”சிறிது நேரத்தில் சென்றுவிடுகிறேன்” என்று கூற, உடனே காச்சு மூச்சு, என்று சத்தம் போட்ட டெல்னா, இயக்குநரை அழைத்து, அந்த நடிகர் அறையில் இருந்து வெளியேறவில்லை என்றால், படப்பிடிப்பை விட்டு நான் சென்றுவிடுவேன், என்று மிரட்டல் விடுத்தாராம்.
உடனே, இயக்குநர் அந்த நடிகரை வேறு எங்காயாவது சென்று மேக்கப் போடுங்கள், என்று கூறி அவரை வெளியேற்றிய பிறகு தான் டெல்னா சாந்தமானாராம்.
டிஆர்பி ரேட்டிங்கில் இன்னும் சூடுபிடிக்காத ஒரு சீரியலில் நடிக்கும் போதே நடிகை டெல்னா டேவிஸுக்கு தலைகணம் இப்படி இருக்கிறதே, இன்னும் அந்த சீரியல் நம்பர் ஒன் நிலைக்கு வந்தால், என்ன என்ன செய்வாரோ, என்று படப்பிடிப்பில் இருந்த சிலர் முனு முனுத்தார்களாம்.
JioHotstarhas unveileda bold and unexpected teaser for its upcoming Tamil tentpole series, Hotstar Specials ‘Muthu Alias Kaattaan’headlined byVijay Sethupathy...
நடிகரும், த.வெ.க-வின் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...
ஃபர்ஸ்ட் காபி புரொடக்சன்ஸ் ( First Copy Productions ) சார்பில் மாலா மணியன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘சிறகு’...