சிவகார்த்திகேயன் நடிப்பில், எழில் இயக்கத்தில் வெளியான ‘மனம் கொத்தி பறவை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மியா. இப்படத்திற்குப் பிறகு மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் சில படங்களில் நடித்து வந்த ஆத்மியாவுக்கு எதிர்ப்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது சமுத்திரக்கனி நடிப்பில், சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெள்ளை யானை’ படத்திலும், ‘அவியல்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் முடிவடைந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், ஆத்மியாவுக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஆத்மியாவுக்கு அவரது குடும்பத்தார் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். கேரள மாநிலம், கன்னூரைச் சேர்ந்த சனூப் என்பவரை ஆத்மியா திருமணம் செய்ய உள்ளார். சனூப் கப்பலில் பணியாற்றி வருகிறாராம்.
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆத்மியா - அனூப் திருமணம் நாளை (ஜனவரி 25) காலை கன்னூரில் நடைபெற உள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...