சிவகார்த்திகேயன் நடிப்பில், எழில் இயக்கத்தில் வெளியான ‘மனம் கொத்தி பறவை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மியா. இப்படத்திற்குப் பிறகு மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் சில படங்களில் நடித்து வந்த ஆத்மியாவுக்கு எதிர்ப்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது சமுத்திரக்கனி நடிப்பில், சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெள்ளை யானை’ படத்திலும், ‘அவியல்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் முடிவடைந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், ஆத்மியாவுக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஆத்மியாவுக்கு அவரது குடும்பத்தார் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். கேரள மாநிலம், கன்னூரைச் சேர்ந்த சனூப் என்பவரை ஆத்மியா திருமணம் செய்ய உள்ளார். சனூப் கப்பலில் பணியாற்றி வருகிறாராம்.
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆத்மியா - அனூப் திருமணம் நாளை (ஜனவரி 25) காலை கன்னூரில் நடைபெற உள்ளது.
அறிமுக இயக்குநர் லெனின் வடமலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘யாரு போட்ட கோடு’...
Director Parameshwar Hivrale is bringing to the screen the life story of Gummadi Narsaiah- the CPI former MLA from Illandu, known as a champion of the poor and famously known for riding a bicycle to the Assembly...
அஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இன்வஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் படம் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’...