சிவகார்த்திகேயன் நடிப்பில், எழில் இயக்கத்தில் வெளியான ‘மனம் கொத்தி பறவை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மியா. இப்படத்திற்குப் பிறகு மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் சில படங்களில் நடித்து வந்த ஆத்மியாவுக்கு எதிர்ப்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது சமுத்திரக்கனி நடிப்பில், சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெள்ளை யானை’ படத்திலும், ‘அவியல்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் முடிவடைந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், ஆத்மியாவுக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஆத்மியாவுக்கு அவரது குடும்பத்தார் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். கேரள மாநிலம், கன்னூரைச் சேர்ந்த சனூப் என்பவரை ஆத்மியா திருமணம் செய்ய உள்ளார். சனூப் கப்பலில் பணியாற்றி வருகிறாராம்.
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆத்மியா - அனூப் திருமணம் நாளை (ஜனவரி 25) காலை கன்னூரில் நடைபெற உள்ளது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...