சிவகார்த்திகேயன் நடிப்பில், எழில் இயக்கத்தில் வெளியான ‘மனம் கொத்தி பறவை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மியா. இப்படத்திற்குப் பிறகு மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் சில படங்களில் நடித்து வந்த ஆத்மியாவுக்கு எதிர்ப்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது சமுத்திரக்கனி நடிப்பில், சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெள்ளை யானை’ படத்திலும், ‘அவியல்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் முடிவடைந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், ஆத்மியாவுக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஆத்மியாவுக்கு அவரது குடும்பத்தார் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். கேரள மாநிலம், கன்னூரைச் சேர்ந்த சனூப் என்பவரை ஆத்மியா திருமணம் செய்ய உள்ளார். சனூப் கப்பலில் பணியாற்றி வருகிறாராம்.
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆத்மியா - அனூப் திருமணம் நாளை (ஜனவரி 25) காலை கன்னூரில் நடைபெற உள்ளது.
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...