ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த நயந்தாரா, தற்போது கதையின் நாயகியாக நடித்து வருவதல், அவருக்கு ஜோடி தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், ’ஈரம்’, ‘வல்லினம்’, ‘குற்றம் 23’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வரும் அறிவழகன், அடுத்ததாக நயந்தாராவை கதையின் நாயகியாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார்.
எஸ்.பி.சினிமாஸ் சார்பில் ஷங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்க, கே.எம்.பாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் ஹீரோ நயந்தாரா தான் என்றாலும், கதையின் முக்கிய பகுதியில் அவருக்கு ஜோடி இருக்கிறதாம். அந்த வேடத்தில் நடிக்க வைப்பதற்காக ஒருவரை தேடி வரும் இயக்குநர் அறிவழகன், இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...