Latest News :

எல்லை மீறிய நடிகையின் டார்ச்சர்! - ‘அன்பே வா’ சீரியல் குழு பறிதவிப்பு
Tuesday February-02 2021

சினிமா நடிகைகள் ஓய்வு பெறும் நேரங்களில் சீரியலுக்கு தாவுவது வழக்கமாக இருந்த நிலையில், தற்போது சீரியலில் நடிக்கும் நடிகைகள் சினிமாவிலும் பிரபலமாவது டிரெண்டாகி வருகிறது. பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் சீரியலில் நடித்து பிறகு சினிமாவில் கதாநாயகியாக வெற்றி பெற்றதால், தற்போது சீரியலில் நடிப்பதில் ஏராளமான நடிகைகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்கள்.

 

அந்த வகையில், ‘குரங்கு பொம்மை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான மலையாள நடிகை டெல்னா டேவிஸ், பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் டெல்னா டேவிஸ், கொடுக்கும் டார்ச்சரால், ‘அன்பே வா’ சீரியல் குழுவினர் பறிதவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

டிவி சீரியல்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் வீடுகளில் நடைபெறுவதால் நடிகர், நடிகைகளுக்கு கேரோவேன் வழங்க மாட்டார்கள். படப்பிடிப்பு நடைபெறும் வீடுகளில் அனைத்து வசதிகளும் இருப்பதால், அங்கிருக்கும் அறைகளையே நடிகர், நடிகைகள் பயன்படுத்துவது தான் வழக்கம். 

 

ஆனால், டெல்னா டேவிஸ், கேரோவேன் கேட்டு அடம்பிடிக்கிறாராம். கேரோவேன் வழங்கவில்லை என்றால், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, படப்பிடிப்பில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுக்கிறாராம்.

 

இப்படி பல வகைகளில் படக்குழுவினருக்கு தொல்லை கொடுப்பவர், சமீபத்தில் ஹேர் ஸ்டைலிஷ் பணியை செய்து வந்த திருநங்கை ஒருவரை பணியில் இருந்து நீக்கிவிட்டு, கேரளாவில் இருந்து வேறு ஒரு ஹேர் ஸ்டைலிஷை வர வைத்தாராம்.

 

சீரியலும் பெரிய ஹிட் இல்லை, சினிமாவிலும் இவர் பிரபலம் இல்லை, என்றாலும், டெல்னா டேவிஸ் டார்ச்சர் கொடுப்பதற்கு காரணம், சீரியல் தயாரிப்பு நிறுவனத்தின் உயர் அதிகாரி தான் என்றும் கூறுகிறார்கள்.

 

டெல்னா டேவிஸ் சொல்வதை அப்படியே கேட்டு அவருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்கும் அந்த உயர் அதிகாரியின் செல்லத்தால் தான், நடிகையின் டார்ச்சர் தற்போது எல்லை மீறியிருப்பதாக, ‘அன்பே வா’ சீரியல் குழு புலம்பி வருகிறது.

 

கார்ப்பரேட் நிறுவனமான சரிகமா, நடிகை கேட்கும் கேரோவேன் உள்ளிட்ட கூடுதல் வசதியை கொடுத்து விடலாம். ஆனால், இதையே மற்ற நடிகைகள் பின் தொடர்ந்தால், தனிப்பட்ட சீரியல் தயாரிப்பாளர்கள் நிலை என்னாகுமோ.,

Related News

7266

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery