மக்களிடம் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் ஜாக்குலினும் ஒருவர். விஜய் தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியான இவர், தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஜாக்குலின் திருமணத்திற்கு ரெடியாகி விட்டார். அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பவர் யார்? என்பதை அவரே சமீபத்தில் அறிவித்தார்.
அதாவது, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வபோது பதில் அளிப்பது ஜாக்குலினின் பழக்கம். அப்படி ஒரு முறை ரசிகர்களுடன் அவர் உரையாடிய போது, ஒரு ரசிகர், எப்போது திருமணம்? என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஜாக்குலின், நான் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன். நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள், என்று விளையாட்டாக பதில் அளித்தார்.
அவருடைய இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் பலர், “நான் ரெடி” என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...