மக்களிடம் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் ஜாக்குலினும் ஒருவர். விஜய் தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியான இவர், தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஜாக்குலின் திருமணத்திற்கு ரெடியாகி விட்டார். அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பவர் யார்? என்பதை அவரே சமீபத்தில் அறிவித்தார்.
அதாவது, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வபோது பதில் அளிப்பது ஜாக்குலினின் பழக்கம். அப்படி ஒரு முறை ரசிகர்களுடன் அவர் உரையாடிய போது, ஒரு ரசிகர், எப்போது திருமணம்? என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஜாக்குலின், நான் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன். நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள், என்று விளையாட்டாக பதில் அளித்தார்.
அவருடைய இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் பலர், “நான் ரெடி” என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...