பிக் பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளரான நடிகை சனம் ஷெட்டி, பிக் பாஸ் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமான மாடல் தர்ஷனை காதலித்ததும், அவர்களது காதல் நிச்சயம் வரை சென்ற நிலையில், தர்ஷன் திடீரென்று சனம் ஷெட்டியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததும் அனைவரும் அறிந்தது தான்.
தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்த சனம் ஷெட்டி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது காதல் தோல்வி குறித்து பேசுவார், என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், அவர் தர்ஷன் குறித்து எங்குமே பேசவில்லை.
இதற்கிடையே, தர்ஷன் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட, ஷெனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சோசியல் மீடியாவில் பதிவுகள் வெளியிடுவதில் ஆர்வமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சனம் ஷெட்டி மீண்டும் காதலில் விழுந்துள்ளார். அவர் தனது புதிய காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடியதோடு, அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
ஆனால், தனது காதலர் யார்? என்பதை மட்டும் சொல்லாதவர், காதலரின் புகைபடத்தையும் வெளியிடாமல், தனது கையை ஆண் ஒருவர் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...