Latest News :

ரசிகர்களால் ஏற்பட்ட அவமானம்! - வருத்தத்தோடு அஜித் வெளியிட்ட அறிக்கை
Tuesday February-16 2021

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தனது ரசிகர் மன்றத்தை கலைத்து பல ஆண்டுகள் ஆனாலும், அவரது புதிய படங்கள் ரிலீஸீன் போது அஜித் ரசிகர்கள் தியேட்டரில் பேனர் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது ஆகியவற்றை தொடர்ந்து செய்துக் கொண்டிருப்பதோடு, சமூக வலைதளம் வாயிலாகவும், அஜித் மற்றும் அவர் பற்றிய தகவல்களை அவ்வபோது வைரலாக்கி வருகிறார்கள்.

 

இப்படி அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களாக இருப்பவர்கள் சிலரால் அஜித்துக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு, அரசியல் நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் என பல இடங்களில் அஜித் ரசிகர்கள் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை.

 

இந்த நிலையில், ரசிகர்களின் இந்த செயலால் அஜித்துக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதோடு, இதை அவர் ரசிகர்களால் தனக்கு ஏற்பட்ட அவமானமாக பாவித்து, தனது வருத்தத்தை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

 

அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீதும் என் படங்களின் மீதும் அபரிவிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

 

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் ‘வலிமை’ படம் சம்மந்தப்பட்ட அப்டேட் கேட்டு, அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.

 

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

 

என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செய்படுவார்கள் என நம்புகிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

7298

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் - ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு
Monday June-23 2025

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...

பார்வையாளர்களின் இதயத்தை மாற்றக்கூடிய படமாக ‘குட் டே’ இருக்கும் - இயக்குநர் ராஜு முருகன்
Sunday June-22 2025

நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க,  அறிமுக இயக்குநர் என்...

47:58 மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டு உலக சாதனை படைத்த சீகர் பிக்சர்ஸின் ‘டெவிலன்’!
Sunday June-22 2025

தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...

Recent Gallery