சீரியல் நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் சித்ரா தற்கொலை செய்துக் கொண்ட சோகம் மறைவதற்குள் இன்னொரு சீரியல் நடிகர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர் இந்திரகுமார். இலங்கை தமிழரான இவர், நேற்று முன் தின இரவு தனது நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்றுள்ளார்.
பிறகு தனது நண்பரின் அறையிலேயே தங்கிய இந்திரகுமார், காலையில் அதே அறையில் தூக்குப் போட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இந்திரகுமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...